சமயபுரம் மாரியம்மன் கோயில் என்பது மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும், இந்த தெய்வம் இந்தியாவின் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள சமயபுரத்தில் இருந்து வந்து அருளாட்சி செய்கிறாள்.
இங்கு மூலவர் ஸ்ரீ மாரியம்மன் திருச்சி சமயபுரத்தில் இருக்கும் அபிசேக அம்மனின் திருவுருவத்தை போல இருப்பவர். அம்மனுக்கு நோய்களைக் குணப்படுத்தும் சக்தி இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது, எனவே தமிழ் மாதமான பங்குனியின் திருவிழாவின் போது ஏராளமான சடங்குகள் நடைபெறுகின்றன. அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் தல விருட்சம் வேப்பமரமாகும். வேப்பமரம் என்றாலே அது மகாமாரியின் மறுபிம்பமாக கருதப்படுகிறது. வேப்ப மரத்தை அம்பாளுடன் தொடர்புபடுத்திக் கூறும் மரபு தமிழ்ப்பண்பாட்டில் நிலைபேறுடையதாக கருதப்படுகிறது. |
கோயிலில் உள்ள மற்ற தெய்வங்களுக்கு அபிசேக நேரம் - தினமும் காலை 7.00 மணி
கோவிலில் மாரியம்மனுக்கு அபிசேக நேரம் - தினமும் காலை 8.00 மணி தினசரி பூஜை - காலை 8.30 மணி |